பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை! tamillk news

 

பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை! tamillk news

ஹோமாகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் பட்டதாரி பெண் ஒருவர் அவருடைய பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


அதன்பின் வலிநிவாரணி மாத்திரையை குடித்து காதலன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர் நேற்று (07) பிற்பகல் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரது சட்டையில் ரத்தக்கறை இருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.


விசாரணையில் காதலியை கொலை செய்ததாக குறித்த நபர் கூறியுள்ளார்.


அதன்படி, ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை வீட்டில் 31 வயதுடைய பெண் கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கொலையுண்ட யுவதி நேற்று மாலை 6 மணி அளவில் சந்தேக நபருடனும் அவரது தாயாருடனும் வாடகை அறைக்கு வந்துள்ளதுடன், இரவு 7 மணி அளவில் தாய் மாத்திரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.



அதன் பின்னர், கொலை இடம்பெற்றுள்ளதுடன், சிறு தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


விவசாய அமைச்சில் கடமையாற்றிய அசினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதுடைய பட்டதாரி ஒருவரும் அவிசாவளை, கட்டஹெட்ட, அமுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபர் விவசாய அமைச்சில் பணிபுரியும் பட்டதாரியும் ஆவார்.



சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்