யாழில் உருவான எரிபொருள் தட்டுப்பாடு : அரசாங்க அதிபர் அளித்துள்ள விளக்கம்...!

Tamil lk News

  யாழ்ப்பாண(Jaffna) மாவட்டத்திற்கு தேவையான பெட்ரோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெட்ரோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (17) இத்துடன் இணைக்கப்ட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.



 மேலும் இன்று(18) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்