யாழ் - நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி! Jaffna news

யாழ் - நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி! Jaffna news


 யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் பணியாளரை மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தில் , நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இதன்போது மின்சாரம் தாக்கியதை அடுத்து இளஞர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்