தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக கருதி இன்று முதல் இலங்கையில் பொது மக்களுக்கு தேவையான தபால் சேவையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஹோமாகமவில் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அடிப்படையற்றது எனவும், தபால் திணைக்களம் நஷ்டத்தில் சேவைகளை வழங்கி வருவதாகவும், தனியார் மயப்படுத்தப்படாமல் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு வருவாயைப் பெருக்க மாற்று வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.