தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தம்பாளை - றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று இடம்பெற்றது.
குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது லொறியுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
accident



