(srilanka tamil news) புறக்கோட்டையில் பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன.
பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களின் தோலைப் பளபளப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை கூட பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த நான்கு வர்த்தகர்களும் நீண்டகாலமாக பாரியளவிலான இந்த கிரீம்களை இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகித்து வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |