(trincomalee tamil news) சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று(14) காலை திருகோணமலை சிறைச்சாலையில் இடம்பெற்றது.
திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் நடமாடும் நூலக சேவை பற்றியும் நூலகம் பற்றியும் சிறைக்கைதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஒரு தொகுதி நூல்களை சிறைச்சாலை நூலகத்திற்கு, திருகோணமலை நகர சபையின் செயலாளர் வெ. இராஜசேகர் திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் பிறேமவன்ச அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில், நகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் நா . பரமேஸ்வரன் , திருகோணமலை சிறைச்சாலை பிரதான ஜெயிலர் இ . மோகனராசா , திருகோணமலை பொது நூலகத்தின் பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன் , நூலகர் மு . லெ . றிம்சானா , நூலக உதவியாளர்கள் உ . ரஜனிகாந்தன் , அ . அச்சுதன் , நூலக உழியர் சி . கமலேஸ்வரி சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தகளான முபாறக் , சாந்த ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |