கனடா மோகத்தால் யாழ்ப்பாணத்தில் ஏமாறும் மக்கள்....! பொலிஸார் எச்சரிக்கை....! tamil lk news

 

tamil lk news

சட்டவிரோதமாக  கனடா செல்ல ஆசைப்படும்  யாழ் மக்களுக்கு   பொலிஸார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண  மக்களை    கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெருந்தொகை மோசடிகள் 

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந் தள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ள பொலிஸார், கனடாவுக்கு அனுப்புவ தாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சி யாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே என் இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என வும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்