மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவரெருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் என்ற மாணவனே நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் முதல் காணாமல்போயுள்ளார்.
குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவன் நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை மதியம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் மாணவன் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது.
மேலும், குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |