வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை....! குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை , மோட்டார் சைக்கிள் கொள்ளை...!

 வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தாயை மிரட்டி நகைகளை பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.


குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று (17.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

vavuniya tamil news-tamil lk news



குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்,

மோட்டார் சைக்கிளை வழிமறித்து

இன்று (17.04) அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்த சமயத்தில் வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.



தீவிர விசாரணை

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்