(vavuniya news) புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது
கைது செய்யும் நடவடிக்கை
அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமையுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேரூந்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்தமையுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
Tags:
Vavuniya-news