மூன்று கிராமங்களை அச்சத்தில் வைத்திருந்த பெண்கள்....! tamil lk news

 

srilanka tamil news-tamil lk news

காலி மாவட்டத்திற்குரிய கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களை பீதியில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பலை வழிநடத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாமி மற்றும் மருமகள் முறை உறவினர்களான 29 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும், கைது செய்யப்படும் போது 2410 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3112 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலை முழுமையாக இந்த 2 பெண்களின் தலைமையின் கீழ் செயற்பட்டுள்ளது.


மேலும் இந்த பெண்கள் வழங்கும் போரா பொருளை இளைஞர் பருகிவிட்டு கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.



ஐந்து வீடுகளில் கொள்ளையடித்து சென்ற ஐந்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஆபரணங்கள், கொள்ளை சம்பவங்களுக்கு  பயன்படுத்தப்பட்ட வாள்கள், கத்திகள், இரும்பு கம்பிகள், மன்னா கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்