வெள்ளவத்தையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

tamil lk news


வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.


இன்று(03) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் எனவும், அவருக்கு 45 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.


இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்