பல்கலைக்கழக சுற்றுலா பேருந்து விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!

 

tamil lk news

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் அம்பகஹஒய பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதிற்கு பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இதன்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விபத்தில் 39 பேர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அவர்களில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்கள் 6 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




குறித்த பகுதியில் கல் ஒன்று காணப்பட்டமையினால் அதில் பேருந்து மோதியதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்