பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; ஐவர் பலி, 15 பேர் காயம்!

 

tamil lk news

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.


இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். இதுதவிர, 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்