நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14, 2024 திகதி அன்று, ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த திணைக்கள அதிகாரிகள் தேர்தல் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சேவைகள் இயங்காது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.