வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும்- காலநிலை!

 

tamil lk news

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடையிடையே  சிறிய மழை கிடைக்கும். எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும். எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 23ஆம் திகதி அதிகாலை மற்றும் காலை வேளைகளில் குளிரான வானிலை நிலவும்." - என்றார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்