சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (16) சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இவ் சிரமதானப் பணியில் மாவீரர்களின் குடும்பத்தினர்,முன்னாள் போராளிகள் ,பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை மாவீரர் தினத்தை எந்தவித பிரச்சினைகளும் இடம் பெறாத வகையில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



