யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியாச்சருக்கு கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 20கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 25, 23 வயதை சேந்தவர்கள் எனவும் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும் அவரிடமிருந்து ஒரு வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகள் யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



