திருகோணமலையில் ஆபத்தான பொருட்களுடன் இருவர் கைது!!

 

Tamil lk News


 டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


 கிண்ணியா - பூவரசன்தீவு பிரதேசத்தை சேர்ந்த, 23 வயதான இளைஞனும் 33 வயதான குடும்பஸ்தருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



 கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும், பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்