அடுத்துவரும் 36 மணி நேரத்தில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில். சுமார் 75 மி.மீ. மிதமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


