ஆஸ்திரேலியாவில் இலங்கையில் பிறந்த பெண்ணுக்கு உயர் பதவி


இலங்கையில் பிறந்த பெண் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.



சிம்பாப்வே நாட்டுக்கான ஆஸ்திரேலியா தூதுவராக இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மினோனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான தகவலை ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பானிஸுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் மினோனி பெரேரா கொங்கோ, மலாவி,செம்பியா, மற்றும் கொங்கோ -பிரஸ்ஸாவில்லி ஆகிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியா ராஜதந்தரியாக இவர் செயல்படுவார் என தெரிவித்தார்.

இதே வேலை இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் நியமனம் பெற்ற முதலாவது தூதுவர் என இவரை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவருக்கான இந்த நியமனத்தின் நோக்கமானது ஆஸ்திரேலியா, சிம்பாவே இரு நாட்டுக்கு இடையிலான உறவினை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்