மைத்திரிக்கு பிரதமர் பதவிக்கு சென்ற அழைப்பு

 



நாட்டைக் கட்டி எழுப்புவதற்காக பிரதமர் பதவிக்காக சஜித் பிரேமதாச, மைத்திரிபால மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு பிரதமர் பதவியை ஏக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அனைவரும் சவாலை ஏற்க மறுத்து விட்டார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து நேர்காணலில் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், இத்தருணத்தில் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்  என்பதே எம்மால் எடுக்கப்பட்ட கூட்டுத் தீர்மானமாகும்.

அமைச்சர் மேலும் கூறுகையில் தற்போதைய நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது ஆதரவை வழங்குவதே உகந்ததென நாம் உறுதியாக நம்புகின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன் வந்து சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவாளித்து அவர் சிறப்பாக நாட்டை கட்டி எழுப்புகிறாரா என்பதற்கு அவருக்கு நாம் உரிய காலத்தை வழங்க வேண்டும். என்று கூறினார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்