யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு!



யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநரான ஜீவன் தியாகராஜா மாகாண நகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த அழைப்பானது எதிர்வரும் 5 ஆம் திகதி காலையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு நேரம் குறிப்பிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர்.


மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சபை உறுப்பினர்கள் இதனை தோற்கடிக்காமையினால் மானாகர சபை முதல்வர் 31 நள்ளிரவு முதல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இந்தநிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய முதல்வருக்கான சபை கட்டளை சட்டத்தின் பிரகாரம் நடத்த முடியாத நிலைமைகள் காணப்படுவதால் இந்த விடயம் தொடர்பாக ஆலோசனைகளை பெற சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாவும் உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களை தனித்தனி கட்சியாக சந்தித்து இவ்விடயங்களை ஆராய்வதற்காக ஆளுநரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்