முட்டையால் இலங்கைக்கு வைரஸ் நோய் வரும் ஆபத்து!



தற்போது நாட்டில் முட்டை பற்றாக்குறை காரணமாக முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்த வேளையில் அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் முட்டையினால் Avian lnfluenza எனப்படும் வைரஸ் இலங்கைக்கு வரும் அபாயம் ஏற்பட உள்ளதாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் நாட்டுக்கு முட்டையை இறக்குமதி செய்வது பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த விடயம் குறித்து அரசு கால்நடை வைத்திய அதிகாரி சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிறிய பியசிறி தெரிவிக்கையில் பறவை காய்ச்சல்கள் இலங்கைக்குள் வருவதை தடுப்பது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் பெரும் பங்காற்றிவுள்ளதா தெரிவித்தார்.


மேலும் இது சம்பந்தமாக கால்நடை மருத்துவர்கள், கால்நடை புலனாய்வு அதிகாரிகள், மற்றும் ஆய்வு பிந்தைய நிறுவனங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து பறவை காய்ச்சலை வருவதை தடுக்கின்றன தெரிவித்தார்.


இவ்வாறாக இலங்கைக்குள் இது போன்ற நோய்கள் உள் நுழைந்தால் மிகவும் சிக்கலாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்