தாயை கொன்ற மகன் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

tamillk.com


கபித்திகொல்லாவ, ஐத்திகே குளம் பகுதியில் வீடொன்றில் இருந்த பெண் ஒருவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்த சந்தேகநபர் 8 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக கபித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த பெண்ணின் மகன் டபிள்யூ.ஜே.சி. விஜேரத்ன, இரண்டாவது தொண்டர் இலங்கை இராணுவ சேவைப் படையில் பணியாற்றியவர்.


சந்தேக நபர் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி வீட்டில் இருந்த தனது 50 வயது தாயை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.


மர்மமான முறையில் இடம்பெற்ற இக்கொலையின் கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக அன்றிலிருந்து கபிதிகொல்லேவ குற்றப் புலனாய்வுப் பிரிவின் கபித்திகொல்லேவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பிரகாரம் இச்சிப்பாயை பிரிந்து வாழும் அவரது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். .


இதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கொலையை செய்தவர் உயிரிழந்த பெண்ணின் மகன் என கண்டறியப்பட்டதுடன், கபிதிகொல்லேவ பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கொலையாளி பணியாற்றிய கட்டுநாயக்க இராணுவ முகாமின் கட்டளை அதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.


சந்தேகநபர் நேற்று (மார்ச் 25) பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதுடன், இன்று (மார்ச் 26) கபிதிகொல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்