இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திரு எரிக் வோல்ஸ் யாழ்ப்பாணம் சென்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல்வாதி இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரை சந்தித்து இரகசிய கலந்துரையாடலை நடத்தினார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான திரு.மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச மீது கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்தமைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
கனேடிய உயர்ஸ்தானிகரின் இந்த நடவடிக்கை, தூதுவர்களுக்கான வியன்னா உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று கூறும் வடமாகாண வட்டாரங்கள், 13வது திருத்தம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் அவர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதேவேளை, கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் Pierre Solitaire, இந்த நாட்டில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



