அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர் சங்கம்

tamillk.com


நாளை நாடளாவிய ரீதியில் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத் தொடர்பில் இன்று(14) இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றில்  இந்த விடயத்தை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஜனநாயக ஆட்சிக்காக நாளை(15.03.2023) நாடு முழுவதும் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்