டிஐஜி பிரிவு எல்லைகளை நிர்ணயம்:அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

tamillk.com

டிஐஜி பிரிவு எல்லைகளை நிர்ணயம் செய்ய அதிகாரி குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த அதிகாரி குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தற்போதுள்ள DIG பிரிவு எல்லைகள் தற்போதுள்ள மாகாண எல்லைகளுடன் இணைக்கப்படவில்லை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக மாகாணங்களுக்கு ஏற்ப டி.ஐ.ஜி பிரிவுகளின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.


இது தொடர்பில், 9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்