வவுனியாவில் இன்று(24.03.2023) மாலை இடியுடன் கூடிய மழையுடன் காற்றும் வீசியதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் கூடாரத்தின் அருகில் இருந்த மரம் முறிந்து விளைந்ததில் கூடாரத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.
இந்த மரம் விழும்போது கூடாரத்துக்குள் மூன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி முற்றாக சேதம் அடைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
Tags:
Vavuniya news



