.வடமத்திய மாகாணத்தில் கால்நடைகளுக்கிடையில் காணப்படும் 'கம்பி ஸ்கின் நோயை' கட்டுப்படுத்துவதற்கு கால்நடைப் பிரிவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துமாறு விவசாய அமைச்சு கால்நடை வளப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில் உள்ள பல பிரதேச செயலகங்களில் தற்போது பரவி வரும் லம்பி ஸ்கின் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஏப்ரல் 23) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டறிந்தார்.
வடமாகாணத்தில் பரவலாக காணப்பட்ட இந்நோய் தற்போது அந்த மாகாணத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை கொண்டு வரவேண்டாம் என மாகாண கால்நடை திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்திருந்தும் வடமத்திய மாகாண விவசாயிகள் அறிவுறுத்தல்களை புறக்கணித்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் இந்நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக கால்நடை மருத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கால்நடைகளுக்கு இடையே நேரடித் தொடர்பு அதிகரித்து வருவதே இந்நோய் வளர்ச்சிக்கும், பரவுவதற்கும் காரணம் என கால்நடை துறையினர் தெரிவித்தனர்.
"கேப்ரிபாக்ஸ்" என்ற வைரஸால் இந்த நோய் ஏற்படுகிறது என்றும், உண்ணி, பிளேஸ் மற்றும் பிற சிறிய இரத்தத்தை உறிஞ்சும் விலங்குகள் விலங்குகளிடையே வைரஸை விரைவாகப் பரப்பக்கூடும் என்றும் விவசாய அமைச்சகம் கூறுகிறது.
குறிப்பாக இந்நிலையால் மாடுகளுக்கு ஏற்படும் மனக் குழப்பத்தால் கால்நடைகளின் பால் சுரக்கும் திறன் பாதிக்கப்படும்.
இரண்டு வாரங்களில் நோய் குணமாகி, மாடுகள் இறக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், நோயுற்ற கால்நடைகளை மற்ற ஆரோக்கியமான விலங்குகளிடம் இருந்து பிரித்து வைத்திருந்தால், இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என, விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



