(srilanka tamil news)
சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து வெளிநாடுக்கு செல்வதற்கு முற்பட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வியட்நாம் கொடியுடன் 303 இலங்கையர்கள் மீன்பிடி படகு ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது இந்த விபத்து குறித்து இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதிகளில் 151 பேர் நாட்டை வந்து அடைந்துள்ளனர்.
இப்போது வியட்நாமில் எஞ்சியுள்ள 23 அகதிகளும் கடந்த புதன்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிதேசங்களை சேர்ந்தவர்கள்



