ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு இளைஞர்களைக் கொன்றது

 

tamillk

இன்று அதிகாலை 5.45 மணியளவில் கீனவல புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் தொலைபேசி அழைப்பின் போது பயணித்த இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.


இவ்வாறு வெயாங்கொட வதுருவ பிரதேசத்தை சேர்ந்த கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.எகதிவங்க என்ற 19 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.



உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், புகையிரத பாதை வழியாக வதுரவ புகையிரத நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், காலை சுற்றுலா செல்வதற்கு தயாரானதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



இருவரும் தொலைபேசி அழைப்பின் பேரில் பயணித்த போது பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்