(vavuniya tamillk tamil news)
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களை இன்றைய(11.05.2023) தினம் 15க்கும் மேற்பட்ட சட்ட தரணிகளின் கடும் முயற்சியால் பிணையில் செல்வதற்கான அனுமதியை வவுனியா நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆலயத்திற்கான பூஜைகள் வழிபாடுகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்தின் கட்டுமான பணிகள் மற்றும் ஏனைய மாற்றங்களையும் செயல்படுத்தக்கூடாதென நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Tags:
Vavuniya-news