திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கெதிராக நள்ளிரவை தாண்டியும் போராட்டம் தொடர்கிறது

trincomalee tamil news-tamillk


( trincomalee tamil news-tamillk ) திருகோணமலை நெல்சன் திரையரங்குகளுக்கு முன்பாகவுள் காணியில் புத்தர் சிலை வைப்பதற்கான முயற்சிக்கெதிராக அங்குள்ள முக்கிய கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நள்ளிரவை தாண்டியும் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.


திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகின்ற காணியில் தாய்லாந்திலிருந்து புத்தர் துறவியலாளர்கள் வருகையுடன் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளமைக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிலையில் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஆனது பலரின் பங்கேற்புடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் அதில் சிலர் நள்ளிரவு தாண்டியும் தற்போது வரைக்கும் அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்