வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 2000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று (மே 3) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 42 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



