( srilanka tamillk news ) அட்டன் கொழும்பு பிரதான வீதியில் இன்று (மே 8) பிற்பகல் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனில் இருந்து கித்துல்கல வரையில் இந்த அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு அட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
srilanka