ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

srilanka tamil news


தமிழ் அரசியல் கைதியுமான 66 வயது உடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான இவர் நீண்ட காலமாக புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரியும், தனது வழக்குக்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.



மற்றும் தனக்கான சில வழக்குகளை தானே தவணைகளில் வாதாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்