23 வயதான யுவதியொருவர் தனது புதிய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பழைய காதலனிடம் அனுமதி பெறச் சென்று 03 நாட்களைக் கழித்ததாக புலத்சிங்கலில் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதியின் தாயார் தனது மகள் காணாமல் போயுள்ளதாக நேற்று புலத்சிங்கல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இத்தகவல் அனைத்தும் தெரியவந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்களவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த யுவதி, புலத்சிங்களவில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் சில காலமாக உறவுகொண்டுள்ளார்.
சில காலங்களுக்குப் பிறகு, அந்த உறவும் துண்டிக்கப்பட்டு, மற்றொரு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் குறித்த யுவதி காதல் உறவைத் தொடங்கினார், அதற்கு இரு தரப்பினரும் சம்மதித்திருந்த நிலையில், இளம் பெண் திடீரென தனது வீட்டை விட்டு காணாமல் போனார்.
இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகள் காணாமல் போனது குறித்து அவரது தாயார் புலத்சிங்கள பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், மூன்று நாட்களுக்கு பின்னர் யுவதி வீடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாயின் முறைப்பாட்டின் பிரகாரம், புலத்சிங்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேயினால் விசாரணைக்காக குறித்த யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.
இதன்படி பொலிஸ் நிலையத் பரிசோதகர் பழைய காதலனையும் புதிய காதலனையும் பொலிஸாருக்கு வரவழைத்து நீண்ட விசாரணையின் பின்னர் புதிய காதலன் யுவதியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து சம்பவம் சமரசம் ஆனதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



