இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே நேற்று(24.07.2023) இரவு இந்திய கடற்றொழிலாளர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
jaffna



