பல்கலைக்கழக பட்டம் பெற்ற யுவதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்

 

jaffna tamil news-tamillk

( Jaffna tamil news-tamillk ) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து  தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


குறித்த சம்பவம் நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) உயிரிழந்த யுதிக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.



பட்டமளிப்பு விழா நிறைவடைந்தது உடன் நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.



இந்நிலையில் நேற்றிரவு யுவதியின் தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார்.


இதனை அவதானித்த தாயார் யுவதியை மீட்டு மிக விரைவாக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



 இதன் போது மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இவ்வாறு உயிரிழந்த யுவதி சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என தெரிய வந்துள்ளது.



தாய் மற்றும் தந்தை ஆகியோர் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு கொண்டு இருந்தமையால் மன விரக்தி அடைந்த யுவதி உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்