யாழ்ப்பாணத்தில் மாதா சிலைகளை உடைத்த சந்தேக நபர் கூறிய காரணம்


( Jaffna tamil news-tamillk ) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று முன்தினம் (28) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.


அது தொடர்பில், தீவிர விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார், சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர்.

விசாரணை

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில்,



நான் சைவ சமயத்தை சேர்ந்தவன். எனது மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எங்கள் இருவரும் திருமணம் ஆகிய நிலையில் சில வருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்தேன்.



அவ்வேளையில் , “பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.



அதேவேளை, யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்ப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்