வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவலகத்தை நேற்றையதினம் (26.07.2023) ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது சீனித் தொழிற்சாலை காணி ஒதுக்கீடு தொடர்பான ஊடவியலாளர்கள் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது' இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya-news



