( vavuniya news-tamillk ) வவுனியார் நெடுங்கனி பகுதியில் உள்ள சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரையானது சுற்றுப்புறம் காட்டுப் பகுதியாக காணப்பட்டதால் இந்த விகாரையின் நிர்மாண பணிகள் யாரும் அறியாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விகாரையில் எதிர்வரும் 3 ஆம் திகதி பூரண தினத்தில் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குருந்தூர் விகாரையின் பௌத்த பிக்கு கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் இராணுவத்தால் இந்த விகாரையானது கட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள ருவென்வெலிசாய இருந்து சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் யாத்திரை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பிக்கப்பட்ட யாத்திரையானது கடந்த 28 ஆம் திகதி கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் ஆரம்பமான யாத்திரை இன்று (01.07.2023) வவுனியாவை வந்தடைந்தது.
பௌத்த பிக்குகளால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரையில் வருகின்ற 3 ஆம் திகதி விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.




