யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் -அதிபர் நியமனமும் மத சார்பாக போராட்டமும்

 

jaffna newsw

( Jaffna news-tamillk ) யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


வேலணை மத்திய கல்லூரியின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25.07.2023) காலை ஒன்று கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முரண்பாடு

இதன்போது மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

அதிபர் நியமனம்

வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை (17) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.



இந்நிலையில் வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த மாணவர் போராட்டத்தில் அவ்விடத்திற்கு  பொலிஸார் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, புதிய அதிபருக்கு சார்பான பாடசாலையின் சில ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டியதாகவும் அவர்களை பலாத்காரமாக பாடசாலைக்குள் உள் அனுப்ப முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்