மன்னாரில் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

 

mannar tamil news

மன்னார் யோத ஏரியில் படகு கவிழ்ந்து காணாமல் போன இரு மீனவர்களின் சடலங்கள் பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் உயிலங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


 மீன்பிடிக்கச் சென்ற நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கவிழ்ந்த படகு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



அதன்படி, பொலிஸ் உயிர்காப்புப் படையினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், தேடுதலின் போது உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.



மன்னார், சிறிகுளம், பரப்புகண்டல் பகுதியைச் சேர்ந்த 55 வயதான நிமல் பெரேரா மற்றும் 37 வயதான திருசெய் சந்திரன் ஆகிய இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த இருவர் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இரு மீனவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்