திருட்டுடன் தொடர்புடைய 63 வயது நபர் கைது

TMILLK NEWS

 யாழ்ப்பாணம் பொலிசாரால் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது  செய்யப்ப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களிற்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றினை உடைத்து திருடப்பட்டிருந்த்து. அதன் பின் கடை ஒன்றின் கூரை பிரித்து மூன்று இலட்சம் பணம், ஒருலட்சம்  ரூபா பெறுமதியான சிகரட் என்பனவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.



இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழு, நேற்றையதினம் மேலும் ஒரு கடை உடைப்பதற்காக சுத்தியல், சாவிகளுடன் பை ஒன்றை கொண்டு சென்ற சந்தேகநபரை கைது செய்தது.


அவரை விசாரித்தபோது ஏனைய திருட்டு சம்பவங்கள் மேற்கொண்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது.


63 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து விசாரணை இடம்பெறுவதுடன் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்