சாவக்சேரியில் ஏற்பட்ட விபத்தில் பரபரப்பு நிலை

tamillk news


சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-08-2023) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச சொந்தமான பேருந்து புத்தர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து  தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.



குறித்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாத போதும் பேருந்தின் சாரதி மட்டும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பேருந்தில் முன் இருக்கையில் பயணித்த பயணிகள் விபத்து  சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில்,


விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

பழமையான பயணிகள் தரிப்பிடம்

குறித்த விபத்தின்போது யாழிலிருந்து சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களும் சிறிதளவு சேதமடைந்துள்ளதோடு 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பயணிகள் தரிப்பிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்