வவுனியா தோணிக்கல் கொலை தொடர்பாக சந்தேகநபர்களை தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

tamillk news


வவுனியாவில் தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதலை ஏற்படுத்தியும் பெட்ரோல ஊத்தி வீட்டை எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசாவின் இல்லத்தில் பொலிஸார் இன்று (01.08.2023) மாலை ஆஜர்படுத்தியமையுடன் சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர். இதன் போது 24 மணிநேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டிருந்தார்.



கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் மற்றும் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

விசாரணை

அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டமையுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலாம் இணைப்பு

வவுனியா தோனிக்கால் பகுதியில் வீடு புகுந்து தாக்கியும் மற்றும் வீட்டுக்கு தீ வைத்து எரித்ததில் ஒருவர் உயிரிழந்தவர்களுடன் மேலும் 10 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறிக்க சம்பவத்தின் போது வவுனியா ஓமந்தையில் வசிக்கும் பாத்திமா சமீமா சாஷிடின் (21) மற்றும் அவரது கணவர் சந்திரகுலசிங்கம் சுகந்தன் (35) ஆகிய இருவரும் குறித்த தாக்குதலில் தீ வைத்து போகுது உயிரிழந்தார்கள்.


இந்த தாக்குதலின் போது சம்பாவ இடத்தில் பாத்திமா சமீமா சாஷிடின் உயிரிழந்துள்ளார். இவரது கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரினால் அதிரடி தேடலும் விசாரணையும்

இரண்டு குழுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த முரண்பாட்டின் காரணமாகவே திட்டமிடப்பட்டு இந்த தாக்குதலை நடத்திய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


குறித்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் பொல்லுகள் அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 சந்தேகம் நபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை அடையாளம் காணப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா, தவசிக்குளம், நெளுக்குளம்,சிவபுரம் உள்ளிட்டா பல பிரதேசங்களை சேர்ந்த 27 வயதுக்கு 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திதப்பட்டதன் பின்னர் மேலதிக ரவிசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கைது நடவடிக்கை

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்