Srilanka news-tamillk news
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (21) காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka